தமிழக மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு அடித்து சித்ரவதை செய்த சிங்களக் கடற்படை
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டினம்: இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகுகள் மீது சிங்களக் கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியது.
நாகப்பட்டினம் மீனவர்கள் கோடியக்கரை அருகே இன்று மீன்பிடித்துக் கொண்டிதுந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பீதியடைந்த மீனவர்கள் தப்பிக்க முயன்றனர். ஆனால் படகுகளில் ஏறிய இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை அடித்து தாக்கியதுடன் மீன்பிடி வலைகளையும் அறுத்து எறிந்தனர்.
இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால் மீனவர்கள் பாதியிலேயே கரைக்கு திரும்பினர்.












Click it and Unblock the Notifications