சென்னையில் பயங்கர இடி... வாலிபரின் காது செவிடானது - 40 வீடுகளில் டிவி, பிரிட்ஜ் அவுட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நேற்று பெய்த கன மழையின்போது பயங்கர இடி விழுந்ததில் 4 பேருக்கு பெரும் காயம் ஏற்பட்டு விட்டது. அதில் ஒருவரின் காது கேட்கும் தன்மையை இழந்து விட்டது.

சென்னையில் வட கிழக்குப் பருவ மழை காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று காலை நல்ல கன மழை பெய்தது. சென்னை கொடுங்கையூரில், சிவசங்கரன் தெருவை சேர்ந்தவர் எம்ப்ரோஸ். இவரது வீட்டு மாடியில் வட மாநிலத்தைச் சேர்ந்த பிரவீண்குமார், யோகேஸ்வர் மற்றும் மாரியப்பன் ஆகியோர் வாடகைக்குத் தங்கியிருந்தனர்.

நேற்று காலை மூவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பெய்த கன மழையின்போது பயங்கர இடி இடித்தது. இதில் அவர்களது வீட்டின் மீது இடி விழுந்ததில், பிரவீண்குமாரின் காது செவிடாகிப் போனது. மற்ற இருவரும் படுகாயமடைந்தனர். அதேபோல வீட்டிலும் விரிசல் ஏற்பட்டது. எம்ப்ரோஸ் மற்றும் அவரது மனைவியும் காயமடைந்தனர்.

அந்த சமயத்தில் அப்பக்கமாக ரோந்து வந்த சப் இன்ஸ்பெக்டர் வேலு உள்ளே போய் பார்த்தபோது இடி விழுந்து ஐவரும் காயமடைந்துக் கிடந்ததைக் கண்டு திடுக்கிட்டு உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து ஐவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இடி காரணமாக, அந்தப் பகுதியில் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் சேதம் ஏற்பட்டது. டிவி, பிரிட்ஜ் போன்றவை பழுதடைந்து விட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+