40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வருகிறார் ஆங் சான் சூ கி!
நாபிதா: மியான்மர் நாட்டின் எதிர்கட்சி தலைவரான ஆங் சான் சூ கி, 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வர உள்ளார்.
மியான்மர் நாட்டின் எதிர்கட்சி தலைவர் ஆங் சான் சூ கி(67). இவரது தாயார் கிஹின் கை, கடந்த 1960ம் ஆண்டு இந்தியாவிற்கான மியான்மர் நாட்டு தூதராக நியமிக்கப்பட்டார். இதனால் ஆங் சான் சூ கி டெல்லியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. கடந்த 1964ம் ஆண்டு டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் ஆங் சான் சூ கி, பட்டம் பெற்றார்.
அதன்பிறகு நாடு திரும்பிய சூ கி, தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். ஆனால் கடந்த 1989 முதல் 2010ம் ஆண்டு வரை வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது மியான்மர் நாட்டின் எதிர்கட்சி தலைவராக உள்ள சூ கியை, இந்த ஆண்டு மியான்மர் சுற்றுப்பயணத்தின் போது இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
அவரது அழைப்பை ஏற்று அடுத்த மாதம்(நவம்பர்) 13ம் தேதி சூ கி இந்தியாவுக்கு வர உள்ளார். தனது ஒரு வார சுற்றுப்பயணத்தின் போது, நவம்பர் 14ம் தேதி ஜவஹர்லால் நேரு நினைவு சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார்.












Click it and Unblock the Notifications