60 ஈழத் தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புகிறது இங்கிலாந்து
Subscribe to Oneindia Tamil

இலங்கையில் சிங்களவர்களின் தாக்குதலில் பல லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இங்கிலாந்திலும் கணிசமான எண்ணிக்கையில் ஈழத் தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களில் பலருக்கு அகதி உரிமை மறுக்கப்பட்டு இலங்கைக்கே நாடு கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் மேலும் 60 ஈழத் தமிழரை நாடு கடத்த இங்கிலாந்து அரசு முடிவு செய்திருக்கிறது. இவர்கள் அனைவரும் வரும் செவ்வாய்க்கிழமையன்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளனர். அப்படி நாடு கடத்தப்படுவோரை இலங்கை அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்து சித்ரவதை செய்யும் என்பதால் இதற்கு பிரித்தானியா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன












Click it and Unblock the Notifications