தமீம் அன்சாரியுடன் தொடர்பு வைத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம் விசாரணை
தஞ்சாவூர்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டிருக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த தமீம் அன்சாரியுடன் தொடர்பு வைத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தியுள்ளனர்.
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் வழியாக ராணுவ பயிற்சி மையங்கள் பற்றிய தகவல்களை அனுப்பினார் தமீம் அன்சாரி என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த மாதம் 17-ந் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது போலீஸ் கஸ்டடியில் இருக்கும் தமீம் அன்சாரியை நேற்று தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். தமீம் அன்சாரி சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மாணவர் மன்றத்தின் தஞ்சை மாவட்ட பொறுப்பாளராக இருந்திருக்கிறார். இதனால் அவரோடு தொடர்புடைய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சிலரிடமும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
இன்று தமீம் அன்சாரியின் சொந்த ஊரான அதிராம்பட்டினத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.












Click it and Unblock the Notifications