அதே இடத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.. பலத்த மழைக்கு வாய்ப்பு

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில்,
நேற்று அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை 8.30 மணி நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தென்கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டு இருக்கிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியதன் விளைவாக வங்க கடலில் உள்ள ஈரம் மிகுந்த காற்றை தமிழ்நாட்டின் வழியாக ஈர்த்தது. இதன் விளைவாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்துள்ளது. தென் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளிலும், வட தமிழ்நாட்டின் அநேகமாக பகுதிகளிலும் பலத்த மழை எதிர்பார்க்கலாம். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றார்.
சென்னையிலும் மழையும், வெயிலும் கண்ணாமூச்சி
இதற்கிடையே, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு விடிய விடிய நல்ல மழை பெய்தது. இருப்பினும் இன்று காலை முதல் வெயிலும், மழையுமாக மாறி மாறி கண்ணாமூச்சி ஆடி வருகிறது.












Click it and Unblock the Notifications