பாரதிய ஜனதா கட்சிக்கும் எனக்கும் இனி தொடர்பு இல்லை: எதியூரப்பா- டிச.10ல் புதிய கட்சி!

தென்னிந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்த முதல் மாநிலம் கர்நாடாகா. இதற்குக் காரணமாக இருந்தவர் எதியூரப்பா. இவர் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை அடைந்தது. இதில் சுரங்க முறைகேடு புகாரில் எதியூரப்பாவும் சிக்கி சிறைக்குப் போக பெரும் போராட்டம்தான் எதியூரப்பாவுக்கு.
மீண்டும் எப்படியாவது முதல்வர் பதவியை பிடித்தாக வேண்டும் என்று ஆண்டுக்கணக்கில் போராட்டம் நடத்திப் பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. ஜெகதீஷ் ஷெட்டர் அண்மையில் முதல்வரான பிறகு எதியூரப்பாவை சீண்டுவார் யாருமில்லை என்று போகம் மனிதர் விரக்தியடைந்துவிட்டார். இதனால் பாஜகவிலிருந்து விலகும் முடிவை மேற்கொண்டார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், பாஜக பற்றி எதுவுமே நான் பேசுவதற்கு இல்லை. காரணம் நான் பாரதிய ஜனதாவில் இல்லை. நான் டிசம்பர் 10-ந் தேதி புதிய கட்சியைத் தொடங்க இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எதியூரப்பா புதிய கட்சி தொடங்குவது ஆளும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவுதான்!












Click it and Unblock the Notifications