இளையாங்குடியில் பரபரப்பு- பாஜகவினர் மீது மனிதநேய மக்கள் கட்சியினர் தாக்குதல்
இளையாங்குடி: சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில் நடந்த பாஜக நிகழ்ச்சியில், மனிதநேய மக்கள் கட்சியினர் புகுந்து தாக்குதல் நடத்தியதில் ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
இளையாங்குடியில் பாஜக சார்பில் வேலூர் பாஜக மருத்துவர் அணிச் செயலாளர் அரவிந்த் ரெட்டிபடுகொலைக்கு கண்டனமும், இரங்கலும் தெரிவிக்கும் கூட்டம் நடந்தது. இதில் மாநில பொதுச் செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டார். அவர் பேசுகையில், மனிதநேய மக்கள் கட்சியினரை கடுமையாக சாடிப் பேசியுள்ளார்.
இதையடுத்து மனிதநேய மக்கள் கட்சியினரும், தமுமுகவினரும் பெருமளவில் திரண்டு வந்தனர். பாஜக கூட்டத்திற்குள் புகுந்து தாக்குதலில் இறங்கினர். இதில் பாஜக நிர்வாகிகள் இருவர் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தால் இளையாங்குடியில் பரபரப்பு நிலவுகிறது. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மோதல் கலவரமாகி விடாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகளை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications