அரபிக் கடலில் உருவான முர்ஜான் புயல் சோமாலியாவுக்கு போனது..தப்பியது தமிழகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருவானதால் முர்ஜான் எனப் பெயரிடப்பட்டது. இப்புயல் இன்று ஆப்பிரிக்காவின் சோமாலியா கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது.
அரபிக் கடலில் உருவான முர்ஜான் புயலால் தென் தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் இப்புயல் நகர்ந்து ஆப்பிரிக்காவின் சோமாலியா கரையை இன்று கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றாலும் கடலோரப் பகுதியில் மழை பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே அந்தமானில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் வரும் 29-ந் தேதி மழை கிடைக்கும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications