மல்லையாவுக்கு வந்த சோகத்தைப் பாருங்கள்... இனி அவர் 'பில்லியனர்' இல்லையாம்!

போர்ப்ஸ் பத்திரிக்கையின் உலக மகா பெரும் பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் மல்லையாவின் பெயர் 73வது இடத்திற்குப் போய் விட்டது. அவரது சொத்து மதிப்பு தோராயமாக ரூ. 4285 கோடி என்று கூறப்பட்டுள்ளது. அதாவது 800 மில்லியன் டாலராகும்.
2011ம் ஆண்டு இதே காலகட்டத்தில் அவர் 1.1 பில்லியன் சொத்துடன் 49வது இடத்தில் இருந்தார் என்பது நினைவிருக்கலாம். ஆனால் அவருக்கு இப்போது நேரம் சரியல்லை என்பதாலும், அவரது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் பெருத்த சரிவையும், நஷ்டத்தையும், சவால்களையும் சந்தித்து தொய்ந்து போய்க் கிடப்பதாலும் மல்லையாவின் சொத்தும் இறங்கி வந்து விட்டது. ஒரு பில்லியனுக்கும் குறைவான சொத்துக்கு மல்லையா இறங்கிப் போய் விட்டதால் அவர் பில்லியனர் அந்தஸ்தை இழந்து விட்டார்.
இருப்பினும் கெட்டதிலும் ஒரு நல்ல விஷயமாக, ஜெட் ஏர்வேஸ் அதிபர் நரேஷ் கோயலை விட பணக்காரராக தொடர்கிறார் மல்லையா. கோயல், 94வது இடத்தில் இருக்கிறார். அவருடைய சொத்து மதிப்பு 600 மில்லியன் டாலராகும்.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் 2 பில்லியன் டாலர் நஷ்டத்தில் மூழ்கியிருப்பதாகவும், இதுவே மல்லையாவின் இறக்கத்திற்குக் காரணம் என்றும் போர்ப்ஸ் கூறியுள்ளது.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளமே தராமல் இழுத்தடித்து வருகிறார் மல்லையா. அதேசமயம், அவரும், அவரது மகனும் நாடு நாடாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications