தஞ்சாவூரில் ‘கொடி கட்டி பறக்கும்’ திமுக கோஷ்டி மோதல்- டி.ஆர். பாலு பேனர் கிழிப்பால் பரபரப்பு

மோதலின் பின்னணி?
மத்திய அமைச்சரும் தஞ்சாவூர் மாவட்ட திமுக செயலாளருமான பழனிமாணிக்கத்துக்கும் திமுக எம்.பிக்கள் குழுத் தலைவர் டி.ஆர். பாலுவுக்கும் கருத்து வேறுபாடு உச்சத்தில் இருக்கிறது. வரும் மக்களவைத் தேர்தலில் தமது கோட்டையான தஞ்சாவூர் பக்கம் டி.ஆர். பாலு போட்டியிட்டுவாரோ என்ற அச்சம் பழனிமாணிக்கத்துக்கு உள்ளது. இருவரிடையேயான மோதலை தீர்க்க திமுக தலைமை முயற்சித்தது. ஆனாலும் பகிரங்கமாக பத்திரிகையாளர்ளிடம் டி.ஆர். பாலுவை பழனிமாணிக்கம் விமர்சிக்க மீண்டும் கருணாநிதியே பஞ்சாயத்து செய்ய வேண்டிய நிலைமை வந்தது. பின்னர் என்னால் எந்த பிரச்சனையும் வராது என்று கூறி பழனிமாணிக்கமே ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
மீண்டும் மோதல்
இந்நிலையில் தஞ்சாவூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் இன்று டி.ஆர். பாலு கலந்து கொள்ள இருந்தார். இதற்காக அவரை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் மர்மமான முறையில் டி.ஆர். பாலுவின் பேனர்கள் கிழித்து எறியப்பட்டிருந்ததால் தஞ்சாவூரில் பதற்றம் ஏற்பட்டது. பழனிமாணிக்கம் கோஷ்டியினர்தான் இதனை செய்திருக்க வேண்டும் என்று டி.ஆர். பாலு கோஷ்டியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இருதரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கும் இந்த மோதல் கைகலப்பாக மாறும் முன்பு தடுத்தாக வேண்டும் என்கின்றர் தஞ்சாவூர் ‘அணிசேரா' திமுகவினர்!












Click it and Unblock the Notifications