சச்சின் எம்.பியாக எதிர்ப்பு தெரிவித்த மனு-தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர்(39). கிரிக்கெட் போட்டிகளில் இவரது சிறந்த செயல்பாடுகளை பாராட்டும் வகையில், சமீபத்தில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இதற்கு பலத்தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் சச்சினை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து வழக்குகள் தற்போது விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த எம்.எல்.ஏ. ராம்கோபால் சிங் சிசோடியா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது,
கிரிக்கெட் வீரர் ஒருவரை, ராஜ்ய சபா எம்.பி.யாக தேர்வு செய்ய அரசியல் சட்டத்தில் எந்த சட்டமும் இல்லை. எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட கலை, அறிவியல், சமூக அறிவியல், இலக்கியம் ஆகிய துறைகளை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
இந்த நிலையில் கிரிக்கெட் வீரரான சச்சின், எம்.பி.யாக நியமிக்கப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது. எனவே இந்த நியமனத்தை ஏற்க முடியாது என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும். மேலும் இது தொடர்பாக டெல்லி மற்றும் அலகாபாத் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை, உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அல் தாமஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், இந்த மனு விசாரணைக்கு ஏற்றதல்ல. எனவே இதை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறோம் என்று தெரிவித்தது.












Click it and Unblock the Notifications