கோகுல இந்திரா கேஸ்... கருணாநிதிக்கு கோர்ட் சம்மன்
சென்னை: தமிழக அமைச்சர் கோகுல இந்திரா தொடர்ந்துள்ள வழக்கில் டிசம்பர் 18ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறி திமுக தலைவர் கருணாநிதிக்கு சம்மன் அனுப்ப சென்னை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலியில், ஆகஸ்ட் 23ம் தேதி அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து கருணாநிதி கேள்வி பதில் பாணி அறிக்கையில் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து கருணாநிதி உள்ளிட்டோர் மீது சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் வழக்குப் போட்டார் அமைச்சர் கோகுல இந்திரா. அதில்,
உண்மைக்கு புறம்பாக அவதூறு செய்தியை வெளியிட்ட ஆனந்த விகடன் பத்திரிக்கையின் ஆசிரியர், பதிப்பாளர், வெளியீட்டாளர், செய்தியாளர் மற்றும் இந்த செய்தியை மேற்கோள் காட்டி அவதூறாக பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, இவரது கருத்து வெளியிட்ட முரசொலி பத்திரிக்கையின் ஆசிரியர் செல்வம் ஆகியோரை கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கலையரசன், கருணாநிதி உள்ளிட்டோர் டிசம்பர் 18ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications