புயல் சின்னம்: தூத்துக்குடியில் 2ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தூத்துக்குடி: புயல் சின்னம் காரணமாக தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் 2ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்களை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 18ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கியது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில் அதிகமான அளவாக திருச்செந்தூரில் 202 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்களில் ஒரளவுக்கு நீர் நிரம்ப துவங்கி உள்ளது. இதனால் பல பகுதிகளிலும விவசாயிகள் விவசாய பணிகளை துவங்கியுள்ளனர்.
ஆனால் தொடர் மழை காரணமாக உப்பு உற்பத்தி அடியோடு முடங்கியதுள்ளது. மேலும் மீன்பிடி தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை பெய்துள்ள மழைக்கு 4 கால்நடைகள் பலியாகியுள்ளன. 15 வீடுகள் முழுமையாகவும், பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.
இந்த நிலையில் வங்ககடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் அதிக மழை பெய்ய கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலுக்குள் மணிக்கு 50 கிமீ முதல் 60 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications