சென்னையில் புயல்: விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பிவிட முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையை நிலம் புயல் தாக்கினால் விமானங்களை ஐதராபாத், கொழுப்பு உள்ளிட்ட வேறு நகரங்களுக்கு திருப்பி விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலைய இயக்குனர் சுரேஷ் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரை புயல் தாக்க தொடங்கினால் கனமழை பெய்து பாதிப்பு ஏற்படும். இதனால் விமான நிலைய ஓடுபாதைகள் மூடப்படும் என்றும் சுரேஷ் கூறியுள்ளார்.
இதன் காரணமாக சென்னை வரும் உள்நாட்டு விமானங்களை மதுரை, பெங்களூர், ஐதராபாத் நகரங்களுக்கு திருப்பிவிட திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களை திருவனந்தபுரம், ஐதராபாத், கொழும்புவிற்கு திருப்பிவிட திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications