செம்மண் கொள்ளை: தலைமறைவாக இருந்த பொன்முடி மகன் சரண்

Subscribe to Oneindia Tamil

Ponmudi
விழுப்புரம்: செம்மண் கொள்ளை வழக்கில் மாதக் கணக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்ச பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்திருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரி நடத்திய பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோர் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மண் அள்ளினர் என்று புகார் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் பொன்முடி தமது மகன் கவுதம சிகாமணியுடன் தப்பி ஓடி தலைமறைவானார்.

இருவரும் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியிருந்தனர். ஆனால் முன் ஜாமீன் கிடைக்காததால் சில வாரங்களுக்கு முன்பு பொன்முடி வெளியே வந்து கைதானார். தற்போது அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்ட 3 பேர் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் திடீரென சரணடைந்திருக்கின்றனர்,

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+