பிரணாப் முகர்ஜிக்கு வழங்கவிருந்த கெட்டு போன உணவு பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள மாநில ஆளுநர் மாளிகையில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வழங்கப்படவிருந்த கெட்டுப் போன உணவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருவனந்தபுரத்தில் சில மாதங்களுக்கு முன் ஒரு ஹோட்டலில் கோழிக்கறி சாப்பிட்ட கல்லூரி மாணவர் பலியானார். இந்த சம்பவத்திற்கு பிறகு மாநிலம் முழுவதும் அனைத்து ஹோட்டல்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல அமெரிக்க ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு புழுவுடன் கூடிய சிக்கன் வழங்கியது சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹோட்டல் உடனடியாக மூடப்பட்டது.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 29, 30ம் தேதிகளில் திருவனந்தபுரம் வந்தார். அவர் ஆளுநர் மாளிகையில் தங்கினார். அவருக்கு வழங்குவதற்காக ஆளுநர் மாளிகையில் உணவு தயாரிக்கப்பட்டது. அப்போது சமையல் அறையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கெட்டு போன பருப்பு, கெட்டு போன மிளகு, முந்திரி பருப்பு இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+