முன்னாள் அமைச்சர் பொன்முடி கைதாகி விடுதலை

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் செம்மண் அள்ளியதில் அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தம் உள்ளிட்ட 5 பேர் மற்றும் சிலர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கடந்த அக்டோபர் 6ம் தேதி விழுப்புரத்தில் பொன்முடி கைது செய்யப்பட்டார். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொன்முடிக்கு செம்மண் குவாரி வழக்கில் ஜாமீன் கிடைத்தது.
சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு வாரண்ட் இருப்பதாக கூறியதால் குழப்பம் நிலவியது. இதனையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த பொன்முடியை சிறை வாசலில் காத்திருந்த விழுப்புரம் காவல்துறையினர் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொன்முடியை கைது செய்து அழைத்து சென்றனர்.
இதன் பின்னர் வாரண்ட் ஏதும் இல்லை என்று லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இத்தகவலை அடுத்து முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications