ஒண்டிக்கு ஒண்டி... உதயகுமாருக்கு சரத்குமார் சவால்

கூடங்குளம் அணு மின் நிலையத்தை உடனடியாக திறக்க கோரி சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் அக்கட்சி சார்பில் பாளையில் உண்ணாவிரதம் நடந்தது.
உண்ணாவிரதத்தை முடித்து வைத்து சரத்குமார் பேசியதாவது, தமிழகமே மின்வெட்டில் தவிக்கும் நிலையில் கூடங்குளம் அணு மின் உற்பத்தியை அனைவருமே எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். அணு உலை போராட்ட குழுவினரும் சில அரசியல் கட்சியின் தலைவர்களும் மக்களை திசை திருப்பி வருகின்றனர்.
மற்ற பொருட்களை போல் மி்ன்சாரத்தை தேக்கி வைக்கவோ, பதுக்கி வைக்கவோ முடியாது. மின்சாரத்தின் தேவை அறிந்து உற்பத்தியை பெருக்கினால் மட்டுமே மின் பற்றாக்குறை தீரும்.
இன்று 3500 முதல் 4000 மெகா வாட் மின் பற்றாக்குறை இருக்கிறது என்றால் தொலை நோக்கு திட்டங்கள் இல்லாதது தான்காரணம். கூடங்குளம் உள்ளிட்ட நல்ல திட்டங்களையும் சிலர் தடுக்கின்றனர்.
எந்த ஒரு போராட்டத்திலும் பொது நலம்இருக்க வேண்டும். சுயநலம் கலந்த போராட்டங்கள் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகளே எடுத்து சொன்ன பிறகும் கூட உதயகுமார் அதை ஏற்று கொள்ள மறுக்கிறார். போராட்ட குழு தலைவர், அப்துல் கலாமை விட தன்னை பெரிய விஞ்ஞானியாக கருதி கொள்கிறார்.
கூடங்குளத்தில் இன்று கோடிக்கணக்கில் முதலீடு செய்து திட்டம் செயலபாட்டுக்கு வரும் நிலையில் போராட்டக் குழுவினர் எதிர்ப்பதன் நோக்கம் என்ன. முதல் மாதத்திலேயே கருக்கலைப்பு செய்யாமல் 10வது மாதம் கருககலைப்பு செய்தால் அதற்கு பெயர் கொலை என்றே கூற வேண்டும். அதைத்தான் போராட்டக்குழு செய்கிறது.
சரத்குமார் இயற்பியல் படி்த்துள்ளாரா, வேதியியல் படித்துள்ளாரா, எங்களோடு விவாதிக்க தயாரா என்றெல்லாம் உதயகுமார் கேள்வி எழுப்பி வருகிறார். கூடங்குளம் விவகாரம் தொடர்பாக ஒரே பொது மேடையில் உதயகுமாருடன் விவாதிக்க நான் தயார்.
ஒரு தலைவன் என்றால் மக்களை முன்னின்று நடத்த வேண்டும். பெண்கள் பின்னாலும், குழந்தைகள் பின்னாலும் ஒளிந்துகொள்ள கூடாது. கூடங்குளம் அணு உலையை திறந்து மின் தேவையை பூர்த்தி செய்ய நாம் போராடுவோம் என்றார் சரத்குமார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications