ஒண்டிக்கு ஒண்டி... உதயகுமாருக்கு சரத்குமார் சவால்

கூடங்குளம் அணு மின் நிலையத்தை உடனடியாக திறக்க கோரி சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் அக்கட்சி சார்பில் பாளையில் உண்ணாவிரதம் நடந்தது.
உண்ணாவிரதத்தை முடித்து வைத்து சரத்குமார் பேசியதாவது, தமிழகமே மின்வெட்டில் தவிக்கும் நிலையில் கூடங்குளம் அணு மின் உற்பத்தியை அனைவருமே எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். அணு உலை போராட்ட குழுவினரும் சில அரசியல் கட்சியின் தலைவர்களும் மக்களை திசை திருப்பி வருகின்றனர்.
மற்ற பொருட்களை போல் மி்ன்சாரத்தை தேக்கி வைக்கவோ, பதுக்கி வைக்கவோ முடியாது. மின்சாரத்தின் தேவை அறிந்து உற்பத்தியை பெருக்கினால் மட்டுமே மின் பற்றாக்குறை தீரும்.
இன்று 3500 முதல் 4000 மெகா வாட் மின் பற்றாக்குறை இருக்கிறது என்றால் தொலை நோக்கு திட்டங்கள் இல்லாதது தான்காரணம். கூடங்குளம் உள்ளிட்ட நல்ல திட்டங்களையும் சிலர் தடுக்கின்றனர்.
எந்த ஒரு போராட்டத்திலும் பொது நலம்இருக்க வேண்டும். சுயநலம் கலந்த போராட்டங்கள் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகளே எடுத்து சொன்ன பிறகும் கூட உதயகுமார் அதை ஏற்று கொள்ள மறுக்கிறார். போராட்ட குழு தலைவர், அப்துல் கலாமை விட தன்னை பெரிய விஞ்ஞானியாக கருதி கொள்கிறார்.
கூடங்குளத்தில் இன்று கோடிக்கணக்கில் முதலீடு செய்து திட்டம் செயலபாட்டுக்கு வரும் நிலையில் போராட்டக் குழுவினர் எதிர்ப்பதன் நோக்கம் என்ன. முதல் மாதத்திலேயே கருக்கலைப்பு செய்யாமல் 10வது மாதம் கருககலைப்பு செய்தால் அதற்கு பெயர் கொலை என்றே கூற வேண்டும். அதைத்தான் போராட்டக்குழு செய்கிறது.
சரத்குமார் இயற்பியல் படி்த்துள்ளாரா, வேதியியல் படித்துள்ளாரா, எங்களோடு விவாதிக்க தயாரா என்றெல்லாம் உதயகுமார் கேள்வி எழுப்பி வருகிறார். கூடங்குளம் விவகாரம் தொடர்பாக ஒரே பொது மேடையில் உதயகுமாருடன் விவாதிக்க நான் தயார்.
ஒரு தலைவன் என்றால் மக்களை முன்னின்று நடத்த வேண்டும். பெண்கள் பின்னாலும், குழந்தைகள் பின்னாலும் ஒளிந்துகொள்ள கூடாது. கூடங்குளம் அணு உலையை திறந்து மின் தேவையை பூர்த்தி செய்ய நாம் போராடுவோம் என்றார் சரத்குமார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications