மத்திய அமைச்சரான உடனேயே ‘புரமோஷன்?’: கொலைக் கேஸில் சிக்கும் கட்டாரி

லால்சந்த் கட்டாரியா! ஞாயிற்றுக்கிழமையன்று மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றது முதலே சர்ச்சை...சர்ச்சை!
இலாகாவில் குழப்பம்!
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கட்டாரியாவுக்கு முதலில் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜிதேந்தர்சிங் பன்வாருக்கும் இதே பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பொறுப்பு ஒதுக்கப்பட்டது. இதனால் குழப்பம் நிலவியது. பின்னர் பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து முறையிட ஊரக மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.
கொலை வழக்கு
இந்நிலையில் உச்சநீதிமன்றம் கடந்த திங்கள்கிழமையன்று கட்டாரியாவுக்கும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசுக்கும் ஒரு நோட்டீஸை அனுப்பியுள்ளது. கட்டாரியா மீது நிலுவையில் இருக்கும் கொலை வழக்கை ஏன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கூடாது என்று விளக்கம் கேட்டு இந்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
வழக்கின் பின்னணி
கடந்த ஆண்டு ஜூன் 5-ந் தேதி ஜெய்ப்பூரில் உள்ள தனியார் கல்லூரி உரிமையாளரான பன்சிதார் ஜாட் என்பவரைக் கொலை செய்ததில் கட்டாரியாவுக்கு தொடர்பிருக்கிறது என்று குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் கட்டாரியா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதe நிலையில் பன்சிதாரின் மகன் ராஜேந்திர பிரசாத் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். தமது தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
நோட்டீஸ்
இவ்வழக்கை நீதிபதிகள் ஸ்வட்னர் குமார் மற்றும் முகோபாத்யா ஆகியோர் திங்கள்கிழமையன்று விசாரித்தனர். பின்னர் பன்சிதார் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக் கூடாது என்று விளக்கம் அளிக்குமாறு கட்டாரியாவுக்கும் ராஜஸ்தான் மாநில அரசுக்கும் நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர்.
அமைச்சர் பதவியேற்றவுடன் யோகம் அடிக்கும் என்று நம்பினால் கெரகம் வருதே என்று புலம்புகிறாராம் கட்டாரியா!
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications