உயிரைக் காக்க கடலில் குதித்து பலியான கப்பல் மாலுமிகளில் ஒருவர் அரக்கோணத்துக்காரர்
சென்னை: சென்னையில் தரை தட்டிய சரக்குக் கப்பலில் இருந்து உயிர் தப்பிக்க குதித்து மாயமான 5 பேரில் 3 பேரின் சடலங்கள் இன்று கரை ஒதுங்கின. அதில் ஒருவரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தரைதட்டிய கப்பல்சென்னையை நிலம் புயல் உலுக்கி எடுத்துக் கொண்டிருந்தபோது எரிபொருள் இல்லாமல் தவித்த பிரதிபா காவிரி என்ற சரக்குக் கப்பல் அலையால் இழுத்து வரப்பட்டு சென்னை பட்டினப்பாக்கம் கடற்பரப்பில் கரை ஒதுங்கியது. இதனால் கப்பலில் இருந்த உதவிப் படகுகள் மூலம் ஊழியர்கள் பலர் உயிர் தப்பிக்க முயற்சித்தனர். ஆனால் நிலம் புயலின் பேரலைகள் அப்படகுகளை புரட்டிப் போட்டது. இதில் தத்தளித்தவர்களை மீனவர்கள் காப்பாற்றி கரை சேர்த்தனர். இவர்களில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் மாயமாகினர்.
3 சடலங்கள் கரை ஒதுங்கின
இந்நிலையில் மாயமான 5 பேரில் 3 பேரின் சடலங்கள் இன்று சென்னை கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளன. அதில் ஒருவரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த உடல் பிரதிபா காவிரி கப்பலில் உதவிப் பொறியாளராக பணியாற்றிய அரக்கோணத்தைச் சேர்ந்த நிரன் என்ற வாலிபருடையது என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இருவரைத் தேடும் பணி தொடர்கிறது.













Click it and Unblock the Notifications