சென்னையில் விமானம் மீது பாய்ந்த லேசர்.. விமானத்தை தரையிறக்க முடியாமல் தவித்த பைலட்டுகள்!

துபாயில் இருந்து நேற்றிரவு 8.40 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் (எண்-EK 546) சென்னைக்கு வந்தது. இதில் 242 பயணிகளும், 9 பணியாளர்களும் இருந்தனர். கத்திப்பாரா- பரங்கிமலை பகுதி வழியே வந்து விமானத்தை விமானி தரை இறக்க முயன்றார்.
அப்போது ஓடுபாதை அருகே உள்ள பகுதியிலிருந்து விமானத்தின் காக்பிட் விண்ட் ஸ்கிரீன் கண்ணாடி மீது பச்சை நிற மர்ம லேசர் ஒளி பாய்ச்சப்பட்டது. இதனால் விமானிகளின் கண்கள் கூசின.
அவர்கள் விமானத்தை தரை இறக்க முடியாமல் திணறினர். இது குறித்து உடனே விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தந்த விமானிகள், விமானத்தை மிகவும் சிரமப்பட்டு சாமர்த்தியமாக தரையிறக்கினர்.
விமானத்தில் லேசர் ஒளி பாய்ந்தது பற்றி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் விமானி மீண்டும் புகார் செய்தார். இது குறித்து விமான நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர்.
பரங்கிமலை துணை கமிஷனர் சரவணன், விமான நிலைய உதவி கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் மகிமை வீரன் தலைமையிலான டீம் விசாரணையை நடத்தி வருகிறது.
அந்த லேசர் ஒளி பரங்கிமலை, கத்திப்பாரா பகுதிகளில் இருந்து வந்திருக்கலாம் என்று தெரிய வந்தது. இதையடுத்து அந்த பகுதியிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமானம் மீது லேசர் ஒளிக்கற்றையை பாய்ச்சி விமானியை திணறடித்து விமானத்தை விபத்துக்குள்ளாக்க சதி நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.
கத்திப்பாரா பகுதியில் மெட்ரோ ரயில் மற்றும் பெரிய கட்டிடங்கள் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இங்கு கோணங்களை துல்லியமாகப் பார்க்க லேசர் பயன்படுத்தப்படுவதுண்டு. எனவே அங்கு பயன்படுத்தப்பட்ட லேசர் ஒளி விமானம் மீது பாய்ந்ததா என்றும் விசாரணை நடக்கிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி துபாயில் இருந்து சென்னை வந்த விமானம் கோட்டூர்புரம் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது இதே போல் பச்சை நிற லேசர் ஒளி பாய்ந்ததும், அப்போது விமானியின் சாமர்த்தியத்தால் விமானம் தப்பியதும் குறிப்பிடத்தக்கது.
ராணுவத்தின் ஆயுத பயன்பாடுகள் தொடர்பாக பயிற்சிகளுக்காகவும் லேசர்கள் பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனால், அந்த லேசர்கள் எங்கு பயன்படுத்தப்படும் என்பதை ராணுவம் முன்கூட்டியே விமான நிலையங்களுக்குத் தெரிவித்துவிடும். எனவே அந்தப் பகுதிகளில் விமானங்கள் பறப்பதில்லை. ஆனால், சென்னை விமான நிலையத்தின் அருகே ராணுவம் எந்த வகையிலும் லேசர்களை பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனி போன்ற நாடுகளில் லேசர் கதிர்களை கண்காணிக்க என்றே தனி அமைப்பும் கருவிகளும் உள்ளன. இதனால் யாராவது தவறாக அதைப் பயன்படுத்தினால் உடனடியாக கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், நம் நாட்டில் அந்த வசதி இல்லை.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications