சட்டசபை வைர விழா: ஆளுநர் ரோசைய்யாவை நேரில் சென்று அழைத்த ஜெயலலிதா
சென்னை: தமிழக சட்டசபையின் வைரவிழாவிற்கு தலைமை ஏற்குமாறு முதல்வர் ஜெயலலிதா ஆளுநர் ரோசைய்யாவை சந்தித்து அழைப்பு விடுத்தார்.
தமிழக சட்டசபையின் வைர விழா வரும் 30ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவில் பங்கேற்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பிரணாப் தனது அழைப்பை ஏற்று விழாவுக்கு வர சம்மதித்துள்ளதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார். முன்னதாக வைர விழா நினைவு வளைவு அமைக்கும் பணிக்கு கடந்த 29ம் தேதி முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில் ஜெயலலிதா ராஜ்பவனுக்கு சென்று ஆளுநர் ரோசைய்யாவை சந்தித்து பேசினார். அப்போது அவர் சட்டசபை வைர விழாவுக்கு தலைமை ஏற்குமாறு ரோசைய்யாவுக்கு அழைப்பு விடுத்தார். சபாநாயகர் தனபால், நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி ஆகியோரும் ஜெயலலிதாவுடன் சென்றிருந்தனர்.












Click it and Unblock the Notifications