சென்னையில் தரைதட்டிய கப்பலைக் காண குவியும் மக்கள்: நொச்சிகுப்பத்தில் போக்குவரத்து நெரிசல்
சென்னை: சென்னையில் தரைதட்டிய சரக்கு கப்பலான பிரதிபா காவிரியைக் காண மக்கள் கூட்டம், கூட்டமாக கடற்கரைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
சென்னையை நிலம் புயல் உலுக்கி எடுத்துக் கொண்டிருந்தபோது எரிபொருள் இல்லாமல் தவித்த பிரதிபா காவிரி என்ற சரக்குக் கப்பல் அலையால் இழுத்து வரப்பட்டு சென்னை பட்டினப்பாக்கம் கடற்பரப்பில் கரை ஒதுங்கியது. அந்த கப்பலில் இருந்து மாயமான 5 பேரில் 4 பேரின் உடல்கள் நேற்று கிடைத்தன. அதில் ஒரு உடல் அரக்கோணத்தைச் சேர்ந்த நிரஞ்சன் என்பவருடையது என்று அடையாளம் காணப்பட்டது.
இந்நிலையில் மீஞ்சூர் கடற்பரப்பில் இன்று காலை ஒரு உடல் கரை ஒதுங்கியது. காணாமல் போன ஜோசப் என்பவரது உடலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தரை தட்டிய கப்பலில் இருந்து உயிர் தப்பிக்க குதித்த 5 பேருமே பலியாகிவிட்டனர்.
இதற்கிடையே தரை தட்டிய கப்பலைக் காண பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக கடற்கரைக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் கப்பலின் முன்பு நின்று உற்சாகமாக புகைப்படம் எடுத்து வருகின்றனர். பொது மக்கள் கடற்கரைக்கு படையெடுப்பதால் நொச்சிக்குப்பம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications