For Daily Alerts
Just In
அமெரிக்க சாலை விபத்தில் 4 வயது மதுரை சிறுவன் பலிட்
நியூஜெர்சி: அமெரிக்காவில் நிகழ்ந்த சாலை விபத்தில் மதுரையைச் சேர்ந்த 4 வயது சிறுவன் தயானேஷ் பலியாகியிருக்கிறான்.
மதுரையைச் சேர்ந்த பாலாஜி ஜெயகண்ணன், அமெரிக்காவின் நியூஜெர்சியில் முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நாகராணி மகன் தயானேஷுடன் வெளியே சென்ற போது சாலை ஒன்றை கடக்க முயற்சித்திருக்கிறார். அப்போது சிக்னல் எச்சரிக்கையை மீறி வேகமாக சீறி வந்த கார் நாகராணி, தயானேஷ் மீது மோதியது. இதில் தயானேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். நாகராணி காயங்களுடன் உயிர் தப்பினார்,
விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த எலிசா தெம்ப்லோ என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பலியான சிறுவனின் உடலை தமிழகத்துக்கு எடுத்து வர உதவும்படி பெற்றோர் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்திடம் கேட்டு கொண்டுள்ளனர்.
English summary
A four-year-old Indian-American boy was mowed down by a speeding car driven by a woman at a traffic intersection here, police said. The victim, Dhyanesh, son of Balaji Jeyakannan, was struck by the car and killed on the spot at the junction of Jefferson Avenue and Central Avenue on Thursday
Story first published: Saturday, November 3, 2012, 10:10 [IST]