ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் சேர்ந்தார் என்டிஆர் மனைவி லட்சுமி பார்வதி
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: மறைந்த என்.டி.ராமாராவின் மனைவியான லட்சுமி பார்வதி, ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் போய்ச் சேர்ந்துள்ளார்.
என்.டி.ராமாராவின் மறைவுக்குப் பின்னர் தெலுங்கு தேசம் என்டிஆர் என்ற கட்சியை உருவாக்கி செயல்பட்டு வந்தார் லட்சமி பார்வதி. அரசியலில் அவரால் எந்தத் தாக்கத்தையம் ஏற்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் தற்போது அவர் தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார் லட்சுமி பார்வதி.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் என்டிஆர் தெலுங்கு தேச கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகி விட்டதாக தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். மறைந்த என்.டி.ராமராவின் எண்ணங்களையும் கொள்கைகளையும் ஒய்எஸ்ஆர்.காங்கிரஸ் கட்சி பின்பற்றி வருவதால் அக்கட்சியில் இணைகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications