தாஜ் காரிடர் வணிக வளாக வழக்கு: மாயாவதிக்கு எதிரான 7 மனுக்கள் தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil

தாஜ் காரிடர் வழக்கு
2002-ம் ஆண்டு மாயாவதியால் தாஜ் காரிடர் வணிக வளாக திட்டம் தொடங்கப்பட்டது. இதில் ரூ17 கோடிக்கு முறைகேடு நடந்தது என்பது புகார். இது தொடர்பாக 2003-ல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. 2007-ல் மாயாவதி மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மாயாவதிக்கு எதிராக 7 பொதுநலன் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. இந்தப் பொதுநலன் வழக்குகள் மீது இன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
இன்றைய விசாரணையின் போது, மாயாவதியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்திலேயே அனைத்து மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக அவர் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் மாயாவதிக்கு எதிரான 7 பொதுநலன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications