லேப்டாப் கிடைக்காத மாணவர்களை கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பும் பிரின்சிபால்கள் மீது நடவடிக்கை: ஆசிஷ்
தூத்துக்குடி: அரசின் இலவச லேப்டாப் கிடைக்காத மாணவர்களை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்குமாறு அனுப்பி வைக்கும் பள்ளி, கல்லூரி முதல்வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி கலெக்டர் ஆசிஷ் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அரசின் உத்தரவுப்படி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. சுயநிதி பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் கிடையாது. லேப்டாப் பெறும் மாணவ, மாணவிகளுக்காக கணக்கெடுப்பு நடந்தபோது சில பள்ளி, கல்லூரிகளில் தவறுதலாக சுயநிதி பாடப்பிரிவு மாணவர்களும் கணக்கெடுக்கப்பட்டுவிட்டனர்.
இந்த தவறால் சில பகுதிகளில் சுயநிதி பிரிவு மாணவ, மாணவிகளுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. அதனை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுயநிதி பாடப்பிரிவு மாணவர்கள் தங்களுக்கும் லேப்டாப் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில் அரசு எடுக்கும் முடிவுக்கு ஏற்ப அவர்களுக்கும் லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் சில பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும கல்லூரிகளின் முதல்வர்கள் லேப்டாப் கிடைக்காத மாணவர்களை கலெக்டரிடம் மனு கொடுக்குமாறு திசை திருப்பி விடுகின்றனர். இது தவறான செயலாகும். லேப்டாப் கேட்டு மாணவர்கள் கலெக்டர் அலுவலகம் வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரி முதல்வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications