Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பைக்கில் சென்ற வாலிபரை திரும்பிப் பார்த்ததற்காக ஆசிட் ஊற்றி மகளைக் கொன்ற பாக். பெற்றோர்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தெருவில் பைக்கில் சென்ற வாலிபரைத் திரும்பிப் பார்த்த 15 வயது இளம்பெண்ணை அவரது பெற்றோரே ஆசிட் ஊற்றிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் முகம்மது ஜாபர். அவரது மனைவி ஜாஹீன். இவர்களது 15 வயது மகள் கடந்த 29ம் தேதி அன்று தெருவில் பைக்கில் சென்ற வாலிபரை திரும்பிப் பார்த்துள்ளார். இதைப் பார்த்த ஜாபர் மகளைக் கண்டித்துள்ளார். அதற்கு அவர், நான் வேண்டும் என்றே அந்த பையனை பார்க்கவில்லை. மீண்டும் அப்படி பார்க்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

ஆனாலும் மகள் ஒரு வாலிபனைப் பார்த்துவிட்டதால் ஆத்திரமடைந்த ஜாபர் பெற்ற பாசம் இன்றி அவர் மீது ஆசிடை ஊற்றியுள்ளார். இதில் அவர் உடல் வெந்து பலியானார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜாபர் தம்பதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

யாரோ ஒரு வாலிபனை தங்கள் மகள் பார்த்ததால் குடும்ப கௌரவம் கெட்டுவிட்டது என்றும், அதனால் தான் ஆசிட் ஊற்றியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

என்ன கொடுமை!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+