மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகள் பாகிஸ்தானில் தஞ்சம்: சுஷில்குமார் ஷிண்டே

Subscribe to Oneindia Tamil

Sushilkumar Shinde
ரோம்: மும்பையில் 1993-ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்புகளை நடத்திய முக்கிய குற்றவாளிகள் பலருக்கும் பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்திருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.

ரோம் நகரில் நடைபெற்று வரும் இண்டர்போல் கூட்டத்தில் அவர் பேசுகையில்,

1993-ம் ஆண்டு குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 இந்தியர்கள் உயிரிழந்தனர். 713 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு மூளையாக இருந்த பலருமே இப்போதும் பாகிஸ்தானில் பதுங்கி உள்ளனர். இண்டர்போல் அமைப்பால் சிகப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நிலையிலும் அவர்களை பாதுகாக்கிறது பாகிஸ்தான்.

பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகளின் போது இந்த குற்றவாளிகளை ஒப்படைக்கக் கோரி ஆதாரங்களைக் கொடுத்தோம். ஆனால் பலனில்லை. பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்திருக்கும் இந்தத் தீவிரவாதிகளால் மும்பை தொடர் குண்டுவெடிப்பை விட மிகவும் பயங்கரமான ஒரு தாக்குதல் நிகழ்த்தப்படலாம் என்ற அச்சம் இருக்கிறது.

தீவிரவாதிகளின் செயல்பாடுகளினால் இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையில் பீதி ஏற்பட்டிருக்கிறது என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+