மும்பை: இந்தியா, இங்கிலந்து இடையிலான டெஸ்ட் தொடருக்கு மறைந்த கிரிக்கெட் ஜாம்பவானும், முன்னாள் இந்திய கேப்டனுமான மன்சூர் அலிகான் பட்டோடியின் பெயரை வைக்க வேண்டும் என்று அவரது மனைவியும், முன்னாள் நடிகையுமான ஷர்மிளா தாகூர் விடுத்த வேண்டுகோளை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்து விட்டது.
இந்தத் தொடருக்கு அந்தோணி டிமெல்லோ கோப்பை என்று பெயர் வைத்துள்ளது கிரிக்கெட் வாரியம்.
இதுதொடர்பாக நேற்று கிரிக்கெட் வாரியத்திற்குக் கடிதம் எழுதியிருந்தார் ஷர்மிளா.
இதுகுறித்து கிரிக்கெட் வாரிய கெளரவச் செயலாளர் சஞ்சய் ஜெகதாலே கூறுகையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முதல் செயலாளராக இருந்த அந்தோணி டிமெல்லோவின் பெயர் இந்த போட்டித் தொடருக்குச் சூட்டப்பட்டுள்ளது. அவரது பெயரில் கோப்பை வழங்கப்படும்.
இந்தக் கோப்பை புதிதாக உருவாக்கப்பட்டதல்ல. 1951ம் ஆண்டே உருவாக்கப்பட்டதாகும்.
மேலும் கடந்த 2007ம் ஆண்டே பட்டோடி பெயரில் கோப்பையை உருவாக்கி இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதியுள்ளன என்றார் அவர்.
A day after Sharmila Tagore wrote a letter to BCCI requesting the India-England series to be officially named after Late Pataudi, BCCI cleared the air and said that the two countries are playing for the Anthony De Mello trophy on Tuesday. Honourary secretary of BCCI, Sanjay Jagdale clarified that the trophy is named after Anthony De Mello, who was the first secretary of BCCI, in a release.