டெங்கு காய்ச்சலுக்கு 3 சிறுமிகள் பலி: சேலம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் வைரஸ் காய்ச்சல் காரணமாக ஒரே நாளில் மூன்று சிறுமிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

இடைப்பாடியைச் சேர்ந்த சிறுமி ஹரிணி, அரசு மருத்துவமனையில் திங்கட்கிழமை இரவு மரணமடைந்தார். இதேபோன்று, நெத்திமேடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீவர்ஷா என்ற சிறுமியும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்ரீவர்ஷாவின் சகோதரியான ஸ்ரீநிஷாவும் மரணமடைந்தார். இரட்டைப் பிறவிகளாக இவர்கள் இருவரும் ஒரே நாளில் உயிரிழந்த காரணத்தில் பெற்றோர்களும், உறவினர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்

இதனையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என கூறி உறவினர்களும், பொதுமக்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கலெக்டர் ஆய்வு

சிறுமிகளின் மரணத்தைத் தொடர்ந்து, கலெக்டர் மகரபூஷனம் மற்றும் அதிகாரிகள், அரசு மருத்துவமனையில் செவ்வாய்கிழமையன்று ஆய்வு மேற்கொண்டனர். குழந்தைகள் நலப் பிரிவை பிரித்து, சுகாதார மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள மருத்துவர்களுக்கு உத்தரவிட்டனர். புதிதாக கட்டப்பட்டுள்ள தளத்தில் இன்னொரு குழந்தைகள் நலப்பிரிவையும் ஒதுக்க அவர்கள் உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+