அவதூறு வழக்கு: நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜராக விஜயகாந்துக்கு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கில் வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேமுதிக சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி நாமக்கல் குளக்கரை திடலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாகப் பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அரசு தரப்பு வழக்கறிஞர் நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி வேலு, இந்த வழக்கு தொடர்பாக டிசம்பர் 3ம் தேதி விஜயகாந்த் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

விஜயகாந்த்தை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+