வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: மீண்டும் கன மழைக்கு தயாராகுங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து 'நிலம்' புயலாக மாறி, கடந்த 31ம் தேதி மாமல்லபுரம் அருகே கரை கடந்தது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

Satellitte
பின்னர் அந்தப் புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில கடலோர மாவட்டங்களை நோக்கி சென்றதால் அங்கு இன்னும் மிக பலத்த மழை பெய்து வருகிறது. ஆந்திராவில் பல கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. இதுவரை அங்கு 37 பேர் பலியாகியுள்ளன.

இந் நிலையில் தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் நிருபர்களிடம் கூறுகையில்,

'நிலம்' புயல் கரை கடந்த பிறகு சில தினங்களாக வானிலையில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது வங்க கடலில் இலங்கை அருகே மன்னார் வளைகுடா பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புதிதாக உருவாகி உள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் பலத்த அல்லது மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+