வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: மீண்டும் கன மழைக்கு தயாராகுங்கள்!
சென்னை: வங்கக் கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து 'நிலம்' புயலாக மாறி, கடந்த 31ம் தேதி மாமல்லபுரம் அருகே கரை கடந்தது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

இந் நிலையில் தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் நிருபர்களிடம் கூறுகையில்,
'நிலம்' புயல் கரை கடந்த பிறகு சில தினங்களாக வானிலையில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது வங்க கடலில் இலங்கை அருகே மன்னார் வளைகுடா பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புதிதாக உருவாகி உள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் பலத்த அல்லது மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications