அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா பெரும் வெற்றி!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் பெரும் வெற்றி பெற்றுள்ளார்.

இது குறித்து அவர் டிவிட்டரில் எழுதியுள்ள செய்தியில், மேலும் 4 ஆண்டுகள்.. நன்றி. இந்த வெற்றி ஒரு விபத்தல்ல. அமெரிக்க மக்கள் மற்றும் என் ஆதரவாளர்களின் வெற்றியாகும். இதற்காக மீண்டும் உங்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
நேற்று தேர்தல் முடிந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்ட்டன. இதில் அதிபர் ஒபாமாவும், குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ராம்னியும் மாறி மாறி மாநிலங்களைக் கைப்பற்றினர்.
போட்டி கொஞ்சம் கடுமையாக இருந்தாலும் பெரும்பாலும் ஒபாமாவின் கையே ஓங்கி இருந்தது. அதிபர் ஒபாமா, இலனாய், கனக்டிகட், மெய்ன், கொலம்பியா, டெலவரே, ரோட் ஐலன்ட், மேரிலான்ட் ஆகியவற்றை வென்றுள்ளார். ராம்னி தற்போது ஆளுநராக உள்ள மாசசூசட்ஸையும் ஒபாமாவே வென்றார்.
ஜார்ஜியா, டென்னஸி, ஓக்லஹாமா ஆகிய மாநிலங்களில் ராம்னி வெற்றி பெற்றார். தெற்கு கரோலினாவில் ராம்னி வென்றுள்ளார். இங்கு ஒபாமா அதிபராக இருந்தபோது ஒருமுறை கூட சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல மேற்கு வர்ஜீனியாவிலும் ராம்னியே வென்றுள்ளார்.
மறுபக்கம் வெர்மான்ட்டில் ஒபாமா வெற்றி பெற்றுள்ளார். கென்டகியை ராம்னி வென்றுள்ளார். இன்டியானாவையும் அவர் பெற்றுள்ளார்.
கடைசி நேரத்தில் ராம்னி பிரச்சாரம் செய்த பென்சில்வேனியாவை ஒபாமா வென்றுள்ளார்.
இரு வேட்பாளர்களும் மாறி மாறி மாகாணங்களைக் கைப்பற்றி வந்தனர். கிட்டத்தட்ட இருவருக்கும் சமமான வாக்குகள் கிடைக்கும் நிலைதான் இருந்தது.
ஆனால் முடிவை நிர்ணயிக்கும் மாநிலங்கள் எனப்பட்ட ப்ளோடா மற்றும் ஒஹோவை ஒபாமா வென்றதால், வெற்றியை ருசித்துவிட்டார் ஒபாமா.












Click it and Unblock the Notifications