ஊழல் கட்காரியை ஆதரிப்பதா?: பாஜக உயர் நிலைக்குழுவுக்கு ராம் ஜேத்மலானி கண்டனம்
டெல்லி: பாஜக தலைவர் நிதின் கட்காரிக்கு ஆதரவு தெரிவித்துள்ள அக்கட்சியின் உயர் நிலைக்குழுவுக்கு பாஜக எம்பியும் வழக்கறிஞருமான ராம் ஜேத்மலானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவிக்கும் நிதின் கட்காரி பாஜக தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த எம்.பி.யும், வழக்கறிஞருமான ராம் ஜேத்மலானி வலியுறுத்தி வருகிறார். ஆனால் நேற்று முன்தினம் கூடிய பாஜக உயர் நிலைக்குழு கட்காரிக்கு ஆதரவாக முடிவு எடுத்துள்ளது. அவரை தலைவர் பதவியில் இருந்து விலக்கும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளது. இதற்கு ராம் ஜேத்மலானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நிதின் கட்காரியின் நிறுவனங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவர் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும் இதே கருத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் கட்காரி தலைவர் பதவியில் நீடிக்கலாம் என உயர்நிலைக் குழு எடுத்துள்ள முடிவு கண்டிக்கத்தக்கது. இது நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். இதன்மூலம் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையிலிருந்து பாஜக விலகிச் செல்கிறது.
மேலும் உயர்நிலைக்குழுவின் இந்த செயலால் ஊழலுக்கு எதிரான என்னுடைய போராட்டம் தனிப்பட்ட போராட்டமாக மாறி உள்ளது.
கட்சியின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் வெளிப்படையாக கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என்று கட்சியின் மூத்த தலைவர்களுக்கு கட்டளையிடப்பட்டள்ளது. ஆனால் இந்த வாய்ப்பூட்டு மூத்த தலைவர்களுக்கு மட்டுமே பொருந்தும். நான் முக்கிய தலைவர் இல்லை. எனவே இது எனக்குப் பொருந்தாது.
இனிமேலும் கட்காரி விவகாரம் குறித்து நான் பேசப் போவதில்லை. ஊழலுக்கு எதிராக போராட வேண்டும் என்ற கொள்கையிலிருந்து பாஜக விலகிச் செல்கிறது என கட்சியினரை எச்சரிக்கப் போகிறேன். ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் கட்காரிக்கு ஆதரவாக இருப்பதால் கட்சியிலிருந்து விலகுவீர்களா என்று என்னைக் கேட்கிறார்கள்.
கட்சி என்ன முடிவெடுத்தாலும் நான் கட்சியை விட்டு விலகப் போவதில்லை. கட்சியில் இருந்துகொண்டே தேவைப்பட்டால் தனியாகக் கூட ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன். மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு கட்சியின் மூத்த தலைவர்களுக்கு உள்ளது. ஊடகங்களில் வெளியாகும் செய்தியை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களே இறுதி முடிவு எடுக்கட்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அத்வானிக்கு கட்காரி நேரில் பிறந்த நாள் வாழ்த்து:
இத்தனை பிரச்சனைகளுக்கு நடுவே கட்காரி பாஜக மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங் மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார்.
மேலும் கட்காரி இன்று 85வது பிறந்தநாள் கொண்டாடும் பாஜக மூத்த தலைவரான அத்வானியை இன்று காலை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அத்வானி கட்காரியை கடுமையாக எதிர்ப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்வானி நாளை திருப்பதி வருகிறார்:
பாஜக தலைவர் அத்வானி நாளை திருப்பதி வருவதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாஜக தலைவர் அத்வானி நாளை காலை திருப்பதி வருகிறார். காலை 11 மணிக்கு திருப்பதியில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். அந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவரான வெங்கையா நாயுடுவும் கலந்து கொள்கிறார். கூட்டத்தை முடித்துக் கொண்டு அத்வானி மாலை நேரத்தில் திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்கிறார்.
நாளை இரவு திருமலையில் தங்கும் அவர் நாளை மறுநாள் காலை மீண்டும் ஏழுமலையானை தரிசித்துவிட்டு டெல்லி புறப்படுகிறார். அத்வானி வருகையையொட்டி திருப்பதி, திருமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications