முழு நேர சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆனார் ராமானுஜம்
சென்னை: தமிழக உளவுப்பிரிவு டிஜிபியாக இருந்தபடி சட்டம் ஒழுங்கு டிஜிபி பணியையும் கூடுதலாக கவனித்து வந்த ராமானுஜம் தற்போது முழு நேர சட்டம் ஒழுங்கு டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
உளவுப் பிரிவு டிஜிபியாக இருந்து வந்த ராமானுஜம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் சட்டம் ஒழுங்கு டிபிஜி பணியையும் கூடுதலாக கவனித்து வந்தார். இந்த நிலையில் தற்போது அவர் முழு நேர சட்டம் ஒழுங்கு டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். இனி உளவுப் பிரிவை அவர் பார்க்க மாட்டார்.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றார் ராமானுஜம்.
ஒருவர் டிஜிபியாக நியமிக்கப்பட்டால் அவரது ஓய்வுக் காலத்தைக் கருத்தில் கொள்ளாமல் 2 ஆண்டுகளுக்கு அப்பதவியில் நீடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது. ராமானுஜம் இந்த மாதத்தோடு ஓய்வு பெறும் நிலையில் இருந்தார். ஆனால் அவரை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டே தற்போது அவருக்கு புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இனிமேல் ரெகுலர் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக ராமானுஜம் செயல்படுவார்.












Click it and Unblock the Notifications