ஸ்கூட்டர் வாங்கித் தராததால் தூக்கில் தொங்கிய 10ம் வகுப்பு மாணவன் ஹேப்பி
டெல்லி: பெற்றோர் ஸ்கூட்டர் வாங்கித் தர மறுத்ததால் டெல்லியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வடக்கு டெல்லியில் உள்ள நரேலாவைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். தனியார் நிறுவன ஊழியர். அவரது மகன் ஹேப்பி(14). அவர் அப்பகுதியில் உள்ள மகாராஜா ஆக்ராசென் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அவர் தனக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கித் தருமாறு தனது பெற்றோரிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் நிதிப் பிரச்சனையால் அவரது தந்தை ஸ்கூட்டர் வாங்கித் தர மறுத்துவிட்டார்.
இதனால் ஹேப்பி மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்த அவர் தனது அறைக் கதவைப் பூட்டிவிட்டு மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஹேப்பியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications