மல்லையா மதுபான நிறுவனத்தின் 53% பங்கை ரூ11,166 கோடிக்கு வாங்கியது டியாகோ!

இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக டியாகோ நிறுவனம் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தமானது கடந்த ஆண்டு கெய்ர்ன் நிறுவனம் வேதாந்தா நிறுவனத்துக்கு பங்குகளை விற்றதைவிட அதிக மதிப்பிலானதாகும்.
விஜய் மல்லையா
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மூலம் பெரும் நட்டத்தை சந்தித்து உரிமத்தை தற்காலிகமாக இழந்திருக்கும் விஜய்மல்லையாவுக்கு அவரது மதுபான நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் கடன் கொடுத்து மீண்டும் கிங்பிஷர் நிறுவனத்தை இயக்க வைக்கும் என்று கூறப்பட்டு வந்தது. விஜய் மல்லையாவின் நிறுவனமானது பேக்பைப்பர், ராயல் சேலஞ்ச், சிக்நேச்சர் போன்ற மதுபானங்களை ஆண்டுக்கு 9 ஆயிரம் லிட்டர் என்ற அளவில் தயாரிக்கிறது. இந்நிலையில் உலகின் முன்னணி மதுபான தயாரிப்பு நிறுவனமான டியாகோ, மல்லையாவின் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை முனைப்புடன் மேற்கொண்டு வந்தது.
டியாகோ
புகழ்பெற்ற ஜானி வாக்கர் விஸ்கியை தயாரிக்கும் நிறுவனம்தான் டியாகோ. இந்நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பே மல்லையா நிறுவன பங்குகளை வாங்குவதாகக் கூறப்பட்டது. ஆனால் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விவகாரத்தில் அப்படியே அமுங்கிப் போய்கிடந்தது. இந்நிலையில்தான் இரண்டு தரப்பும் மீண்டும் பேச்சுகளை முனைப்புடன் தொடங்கி இன்று முடிவடைந்திருக்கிறது.
டியாகோ நிறுவனத்தின் chief operating officer ஆக இருப்பவர் இந்தியரான இவான் மென்ஜெஸ். இவர்தான் டியாகோ நிறுவனத்தின் அடுத்த சி.ஈ.ஓ.வாக பொறுப்பேற்பார் என்ற நிலையில் மல்லையா நிறுவன பங்குகள் வாங்கப்பட்டிருக்கிறது.
பங்குகள் கைமாறினாலும் விஜய் மல்லையாவே யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் தலைவராக நீடிப்பார்.












Click it and Unblock the Notifications