நரேந்திர மோடி ஒரு 'குரங்கு': காங்கிரஸ் விமர்சனம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகர்

பேசியது என்ன?
காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநில தலைவரான அர்ஜூன் மோத்வாடியா ஜூனாகத் நகரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசுகையில், ஒரு காட்டில் மரத்தின் மீது உட்கார்ந்து கொண்டு மரத்துக்கு மரம் தாவக் கூடியது குரங்கு. ஆனால் அந்த காட்டுக்கே ராஜா சிங்கம்.. சிங்கம் போன்ற மன்மோகன்சிங்கை குரங்கு போன்ற நரேந்திர மோடி விமர்சிக்கலாமா? என்று சாடியிருந்தார்.
பாஜக கண்டனம்
இதுகுறித்து பாஜக செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், அர்ஜூன் மோத்வாடியாவின் பேச்சு கண்டனத்துக்கு உரியது. இதுபோன்ற தரம் குறைந்த விமர்சனம் தவறானது. நரேந்திரமோடியை தீய சக்தியாக காங்கிரசார் வர்ணிக்கின்றனர். இது காங்கிரசாருக்கு பொருத்தமான செயலா? குஜராத்தில் வளர்ச்சிப் பணிகளை சிறப்பாக செய்து வரும் மோடியை காங்கிரசார் தவறாக விமர்சிக்கின்றனர். இதுபோன்ற தவறான பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பதில் அளிக்க வேண்டும் என்றார்.
தேர்தல் ஆணையத்தில் புகார்
இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி மோடியை விமர்சித்ததால் காங்கிரஸ் கட்சி மீது தேர்தல் ஆணையத்திடம் இன்று பாரதிய ஜனதா கட்சி புகார் மனு கொடுக்க இருக்கிறது. மேலும் மோத்வாடியா பேசிய வீடியோ ஒளிப்பதிவையும் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப் போவதாக பாஜக மூத்த தலைவர் பரேந்து பகத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications