தரைதட்டிய கப்பல் பணியாளர்களைக் காப்பாற்றிய மீனவருக்கு தலா ரூ1 லட்சம்- ஜெ. வழங்கினார்!
சென்னை: நிலம் புயலால் சென்னை பட்டினப்பாக்கம் கடற்பரப்பில் தரை தட்டிய பிரதிபா காவிரி கப்பலின் பணியாளர்களை காப்பாற்றிய மீனவர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தலா ரூ 1 லட்சம் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 31.10.2012 அன்று வங்கக் கடலில் வீசிய 'நீலம்' புயல் காரணமாக 'பிரதீபா காவேரி' என்ற தனியார் சரக்குக் கப்பல் தரை தட்டியது. அக்கப்பலில் இருந்த 25 பணியாளர்கள் உயிர் காக்கும் படகில் ஏறி கரை சேர முயன்றபோது, அப்படகும் கவிழ்ந்து அனைவரும் கடலுக்குள் வீழ்ந்து உயிருக்கு போராடியபோது, கடும் புயல் வீசிக் கொண்டிருந்தபோது தங்களது உயிரை துச்சமென மதித்து, கடலுக்குள் சென்று கப்பல் பணியாளர்களை மீட்டெடுத்த ஊரூர்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் வடிவேலு, கலைமணி, உதயமூர்த்தி, மதன் மற்றும் கப்பல் பணியாளர்களை காப்பாற்ற தனது படகினை அளித்த கோபி ஆகிய ஐந்து பேர்களின் வீரச் செயலையும், தன்னலமற்ற சமுதாய அக்கறையையும் பாராட்டி தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று 6.11.2012 அன்று முதல்- அமைச்சர் உத்தரவிட்டார்.
அதன்படி, முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், ஊரூர் குப்பத்தைச் சேர்ந்த வடிவேலு, கலைமணி, உதயமூர்த்தி, மதன் மற்றும் கோபி ஆகியோருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கி பாராட்டி, வாழ்த்தினார்.
முதல்- அமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து நிதியினை பெற்றுக் கொண்ட மீனவர்கள், தங்களது செயலை பாராட்டி அங்கீகரித்ததோடு நேரில் அழைத்து நிதி அளித்து ஊக்குவித்த முதல்- அமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications