தர்மபுரி கலவரம்: எஸ்.ஐ., உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவு
தர்மபுரி: தர்மபுரி அருகே தீ வைப்பு கலவரம் சம்பவத்திற்கு காரணமாக இருந்ததாக கூறி அறியகுளம் காவல் நிலைய எஸ்.ஐ. பெருமாள் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்ய தர்மபுரி குற்றவியல் நடுவர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரியை அடுத்த செல்லன் கொட்டாயைச் சேர்ந்த இளம்பெண் திவ்யா, நத்தம் காலனியைச் சேர்ந்த இளங்கே மகன் இளவரசன் என்பவரை கலப்புத் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து அறியகுளம் காவல் நிலையத்தில் புகார் செய்வதற்காக பெண்ணின் தந்தை நாகராஜ் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த இளங்கோவின் உறவினரான எஸ்.ஐ., பெருமாள் என்பவர் புகாரை வாங்க மறுத்ததோடு, நாகராஜாவை கேவலமாக பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, அங்கிருந்த இளங்கோ அவரது மகன் இளவரசன், விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் நந்தன், உள்ளிட்டோரும் நாகராஜை தரக்குறைவாக பேசியுள்ளனர். இதனால் மனமுடைந்த புதனன்றுவிஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தனது கணவரை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ., பெருமாள் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாகராஜ் மனைவி தேன்மொழி, மீண்டும் அறியகுளம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், அப்போதும் போலீஸார் புகாரை வாங்க மறுத்தனர். இதனைத் தொடர்ந்து நாகராஜை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவு விட கோரி தேன்மொழி தர்மபுரி குற்றவியல் நடுவர் நீதி மன்றம் என்-,2, ல் வழக்கு தொடர்ந்தார்.
வியாழக்கிழமையன்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதி, நாகராஜை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ பெருமாள், இளங்கோ, இளவரசன், நந்தன், தர்மபுரி குண்டு சக்தி, மாரவாடி ராஜா, நத்தம் காலனி பொடா. பழனிச்சாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
நாகராஜ் புகார் கொடுத்தபோதே அதன் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் 300க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாயிருக்காது. மிகப்பெரிய கலவரமும் ஏற்பட்டிருக்காது என்கின்றனர் உள்ளூர்வாசிகள்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications