தமிழக திட்டங்கள்.. பிரதமரின் ஆலோசகர் ஜெயலலிதாவுடன் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

Jayalalitha and Tkanair
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை, பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகர் டி.கே.ஏ. நாயர் இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.

தமிழகத்தில், மத்திய, மாநில அரசுகளால் இணைந்து செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை, ரூ.1,815 கோடி சென்னை துறைமுகம்- மதுரவாயல் மேம்பால இணைப்புச் சாலை திட்டம், எண்ணூர்-மணலி சாலை மேம்பாடு ஆகிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், இந்தப் பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும் ஜெயலலிதாவுடன் நாயர் விவாதித்தாகத் தெரிகிறது.

மேலும் ஸ்ரீபெரும்புதூரில் புதிய விமான நிலைய கட்டுவது தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.

இந்தச் சந்திப்பின்போது பிரதமர் அலுவலக இயக்குநர் பல்லவி ஜெயினும் உடனிருந்தார்.

எண்ணூர்-மணலி பகுதியில் போதிய அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள் செய்யப்படவில்லை என்று ஜப்பானிய முதலீட்டாளர்கள் சமீபத்தில் மத்திய அரசிடம் குறைபட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை-பெங்களூர் இடையே ஆந்திரா வழியாக மூன்றாவது எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணிக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் ஆகியவை ஒப்புதல் தந்துவிட்டன. 258 கி.மீ. நீளமுள்ள இந்த சாலை மத்திய அரசின் உதவியோடு அமைக்கப்படவுள்ளது.

அதே போல சென்னை துறைமுகம்- மதுரவாயல் மேம்பால இணைப்புச் சாலை திட்டம் சென்னை குடிநீர் வாரியத்தின் சில தடைகள் காரணமாக முடங்கியுள்ளது.

திமுக-காங்கிரஸ் உறவு அவ்வளவு சீராக இல்லாத நிலையில் பிரதமரின் ஆலோசகர் முதல்வரை சந்தித்திருப்பது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+