அமெரிக்க போர் விமானங்களை தாக்கியதா ஈரான்?
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: பெர்சியன் வளைகுடா கடற்பரப்பில் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களை ஈரான் போர் விமானங்கள் சுட்டதாக அமெரிக்கா தெரிவித்திருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பாக நவம்பர் 1- ந்தேதியன்று பெர்சியன் வளைகுடா கடற்பரப்பில் அமெரிக்க ஆளில்லா போர் விமானங்கள் பறந்தன. அவற்றை ஈரான் போர்விமானங்கள் சுட்டிருக்கின்றன. ஆனால் அமெரிக்க விமானங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் அதிபர் தேர்தல் நடைபெற்ற நிலையில் இத்தகைய ஈரானின் தாக்குதல் குறித்து அமெரிக்கா மவுனம் சாதித்தது ஏன்? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கிறது. இதனால் இப்படி ஒருதாக்குதல் நடந்ததே சந்தேகத்துக்குரியது என்றும் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications