இலங்கையில் இருந்து தப்பி செல்ல முயன்ற 51 ஈழத் தமிழர், 32 சிங்களவர் கைது
Subscribe to Oneindia Tamil
வவுனியா: ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி படகு மூலம் செல்ல முயன்ற 51 ஈழத் தமிழர், 32 சிங்களவரை இலங்கை கடற்படை இன்று காலை கைது செய்துள்ளது.
இலங்கையி மிரிஸ்ஸ கடற்பரப்பில் ஆஸ்திரேலியா நோக்கி சென்று கொண்டிருந்த கங்காரு என்ற மீன்பிடி படகை இலங்கை கடற்படை இன்று அதிகாலை வழிமறித்தது. அப்படகில் 51 ஈழத் தமிழர்களும் 32 சிங்களவரும் இருந்தனர். அனைவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இவர்கள் அனைவரும் வவுனியா, கிளிநொச்சி, சிலாபம், மட்டக்களப்பு, நுவரெலியா, வத்தளை, வென்னப்புவ, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்டோர் அனைவரும் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படையினர் தெரிவித்துளனர்.












Click it and Unblock the Notifications