பாக். அமைச்சர் ஹினா ரப்பானி- பிலாவல் 'கள்ளக் காதல்' செய்தி பரப்பியவர் கைது

ஹினா ரப்பானிக்கும் பிலாவல் பூட்டோவுக்கும் இடையேயான காதல் விவகாரம் அண்மையில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இருவரும் பாகிஸ்தானைவிட்டு ஓடிப் போகவும் முடிவு செய்துவிட்டதாகவும் கூட செய்திகள் வெளியாகின. இருவரும் கிஸ் அடிக்கும் படங்களும் வெளியாயின. இதனால் ஹினா ரப்பானியின் வெளியுறவுத் துறை அமைச்சர் பதவிக்கு வேட்டு வைக்கப்படும் நிலை இருந்தது.
ஆனால் இருவருமே இதை மறுத்த நிலையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் பின்னணி இருப்பதாகவும் இதன் தூண்டுதலிலேயே வங்கதேச இணைய பத்திரிகையில் இச்செய்தி வெளியானதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஹினா ரப்பானி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அவர் அங்குள்ள நிலையில் காதல் கிசுகிசுவை பரப்பிய சலாவுதின் ஷோயப் செளத்ரி என்பவரை பண மோசடி வழக்கில் அந்நாட்டு பொலீசார் கைது செய்திருக்கின்றனர். இவர் ஏற்கெனவே இஸ்ரேலின் மொசாட் உளவுப் படைக்கு வேவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டில் சிறைக்குப் போனவர்தான் சலாவுதின்.
இருப்பினும் பாகிஸ்தான் - வங்காள தேசத்திற்கிடையே பிரச்சனை ஏற்படுத்தாமல் இருக்க சௌத்ரி முன்கூட்டியே கைது செய்யப்பட்டுள்ளார் என வங்காள தேச ஊடகங்கள் கருத்து தெரிவித்து உள்ளன.
A controversial editor of a Bangladeshi online magazine, who had created a stir by alleging a romantic link between PPP chief Bilawal Bhutto and Pakistan Foreign Minister Hina Rabbani Khar, has been jailed on charges of money embezzlement.












Click it and Unblock the Notifications