செல்போன், பைக், பின்னால் பெண் இருந்தால் ஆக்சிடன்ட்தான்.. சொல்கிறார் சத்தீஸ்கர் முதல்வர்!
டெல்லி: அழகான் பெண்கள் மற்றும் செல்போன்களால் தான் சாலை விபத்துகள் ஏற்படுகிறது என்று சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிராக ஏதாவது கருத்து கூறி சர்ச்சையில் சிக்குவது அரசியல்வாதிகளுக்கு வழக்கமாகிவிட்டது. பெண்களுக்கு செல்போன் எல்லாம் தேவையில்லை என்று பிஎஸ்பி எம்.எல்.ஏ. ஒருவர் கூறியது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் இதே போன்றதொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங்.
சாலை பாதுகாப்பு தொடர்பாக நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட ராமன் சிங் பேசியதாவது,
சாலை விபத்துகளில் இளைஞர் இறப்பது அதிகரித்து வருகிறது. நல்ல பைக், நல்ல செல்போன் மற்றும் அழகான காதலி இருந்தால் விபத்துகள் நடக்கும். சாலை விபத்துகளில் சிக்கி இறப்பவர்களில் 55 முதல் 60 சதவீதம் பேர் இளைஞர்.
இளைஞர்கள் செல்போனில் பேசியபடி பைக் ஓட்டினால் விபத்துகள் தான் நடக்கும். அதனால் அவர்கள் வண்டி ஓட்டும்போது செல்போனில் பேசும் பழக்கத்தை விட வேண்டும். ஆயிரக்கணக்கில் செலவு செய்து நல்ல பைக் வாங்கும் மக்கள் சில நூறு ரூபாய் கொடுத்து ஹெல்மெட் வாங்க தயங்குகிறார்கள் என்றார்.
அழகான பெண்களால் விபத்துகள் ஏற்படுகிறது என்று அவர் கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.












Click it and Unblock the Notifications