பாஜக அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யும்: ஜெதீஷ் ஷெட்டர்

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு ஆபத்து அதனால் அது விரைவில் கவிழும் என்று வெளிவரும் செய்தியில் உண்மை இல்லை. கர்நாடகத்தில் பாஜக அரசு 5 ஆண்டுகளை நிச்சயம் நிறைவு செய்யும் என்பதால் யாரும் குழம்பிக்கொள்ள வேண்டாம். நான் பாஜகவில் உள்ளேன். அந்த கட்சியின் சார்பில் முதல்வராக உள்ளேன். நான் என்றென்றும் பாஜகவில் தான் இருப்பேன்.
மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ நக்சலைட்டுகளுக்கு அரசு தொடர்ந்து வாய்ப்பளித்து தான் வருகிறது. ஆனால் அவர்கள் தான் அதை கண்டுகொள்ளவில்லை. அவர்கள் தங்களிடம் உள்ள ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடைந்தால் அவர்களின் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுப்போம் என்று அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பை நக்சலைட்டுகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிமுள்ள இடங்களை மேம்படுத்துவதினால் நக்சல் இயக்கங்களுக்கு முடிவு கட்ட முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications