பால் தாக்கரேவுக்கு ஆக்ஸிஜன் மூலம் செயற்கை சுவாசம்; உணவு உட்கொள்ளவில்லை!

86 வயதான பால் தாக்கரே சில வாரங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டர்ந்து அவரது உடல்நிலை மோசமாகவே உள்ளது. உணவு எதையும் அவர் எடுத்துக் கொள்ளவில்லை. செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால், அவர் வென்டிலேட்டரில் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அவரை மருத்துவமனையில் சந்தித்து உடல் நிலை விசாரித்தார் முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல்.
நான் வென்டிலேட்டரில் இல்லை-பால் தாக்கரே
நேற்று முன் தினம் பால் தாக்கரேவின் பெயரில் அவரது கட்சிப் பத்திரிகையான சாம்னாவில் வெளியிட்ட அறிக்கையில்,
என் உடல் நிலை முற்றிலும் மோசமடையவில்லை; நான் வென்டிலேட்டரில் இல்லை. என் உடல் நிலை விஷயத்தில், நான் எதையும் மறைக்க விரும்பவில்லை.
கடந்த மாதம், தசரா பண்டிகையின் போது நடந்த பொதுக் கூட்டத்திலேயே, "என் உடல் நிலை சரியில்லை' என்பதை கட்சித் தொண்டர்களுக்கு தெளிவாக தெரிவித்து விட்டேன். தற்போது என் உடல் நிலையை சீராக்க டாக்டர்கள் போராடி வருகின்றனர். இருந்தாலும் செயற்கை சுவாசம் அளிக்கும் நிலைக்கு நான் செல்லவில்லை. என் ஆதரவாளர்கள் காட்டும் அன்பும், ஆதரவும், எனக்கு புதிய சுவாசத்தை அளித்துக் கொண்டிருக்கிறது.
என் மகன் உத்தவ் தாக்கரேயும் குடும்பத்தினரும் என்னை, 24 மணி நேரமும் நன்றாக கவனித்துக் கொள்கின்றனர். ராஜ் தாக்கரேயும் அடிக்கடி வந்து என்னை பார்த்துச் செல்கிறார்.
நான் வழக்கம் போல பத்திரிகைகள் படிக்கிறேன்; ஆனால், தொலைபேசியில் யாருடனும் பேசுவதில்லை. மகாராஷ்டிரா மாநில மக்களுக்கும், சிவசேனா கட்சித் தொண்டர்களுக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications