தமிழக மின்தடை வரலாற்றிலேயே முதல் முறையாக... நேற்று முழுவதும் கரண்ட் கட் இல்லை!

Subscribe to Oneindia Tamil

Power Cut
சென்னை: தமிழகத்தில் நேற்று கிட்டத்தட்ட அத்தனை பகுதிகளிலும் மின்சாரம் பெரிய அளவில் ரத்தாகவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. தீபாவளி தினமாதலால், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என அனைத்தும் மூடியிருந்ததால், மின்சாரத் தடை பெரிய அளவில் நேற்று இல்லை. தலைநகர் சென்னையில் நேற்று ஒரு 'பொட்டு' கரண்ட் கூட போகவில்லை.

நேற்று தீபாவளித் திருநாள். நாடே கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தது. தமிழகத்தில் வழக்கத்தை விட அதீத உற்சாகத்துடன் மக்கள் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடி மகிழ்ந்தனர். எங்கு பார்த்தாலும் காதுகளைக் கிழிக்கும் பட்டாசுச் சத்தம்தான். இந்த முறை மழை இல்லாமல் போய் விட்டதால் மக்கள் பெரும் உற்சாகத்துடன் தெருக்களிலும், சாலைகளிலும், வீடுகளுக்கு முன்பும், வீட்டு மொட்டை மாடிகளிலும் பட்டாசுகளைக் கொளுத்தி மகிழ்ந்தனர்.

தமிழகத்தில் இது மழைக்காலம் மட்டுமல்ல, மின்தடைக் காலமும் கூட. தினசரி பல மணி நேர மின்தடையில் சிக்கி மக்கள் உழன்று வருகின்றனர். சென்னையில் 2 மணி நேரம் மட்டுமே. இந்த நிலையில் நேற்று தீபாவளிப் பண்டிகை காரணமாக அரசு, தனியார் அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் உள்ளிட்ட அனைத்தும் விடுமுறை விடப்பட்டு மூடப்பட்டிருந்தன.

இதனால் மிஞ்சிய மின்சாரம் வீடுகளுக்கு தரப்பட்து. அதாவது பல மணி நேர மின்தடையை நேற்று பார்க்க முடியவில்லை. பெரும்பாலான பகுதிகளில் மிகக் குறைந்த அளவிலான மின்தடைதான் அமலானது. சில பகுதிகளில் முழுமையாக மின் விநியோகம் இருந்தது. சென்னையில் நேற்று மின்தடையே சுத்தமாக இல்லை. இதேபோலத்தான் பல பகுதிகளிலும் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று போல என்றும் மின்தடையில்லாமல் நிம்மதியாக டிவி பார்க்க, சட்னி அரைக்க, மாவு அரைக்க, ஏசியில் தூங்க அரசு நிரந்தரமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்த மக்களும் நேற்று ஏக்கத்துடன் வேண்டிக் கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+